Breaking News

''மைக்கிலிருந்து“ மயிரிழையில் தப்பிய சம்பந்தன்-விசாரணை ஆரம்பம்

தமிழரசுக்கட்சியின் கட்சியின் மத்திய
செயல்குழுக்கூட்டத்தில் இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியனைக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார் வடமாகாணசபையின் பேரவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன். எனினும் ஒலிவாங்கி வீச்சிலிருந்து மயிரிழையில் காயங்களின்றி தப்பித்திருந்தார் இரா.சம்பந்தன்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒலிவாங்கியை வீசியமை தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் மீது விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக வாக்குவாதம் இடம்பெற்று இறுதியில் ஒலிவாங்கியை தூக்கிவீசுமளவுக்கு கலகமாகியது.

இதனால் அங்கு பதட்டம் நிலவியதாகவும், இது தொடர்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன்மீது ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படவுள்ளதாகவும் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.