Breaking News

யாழ். துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரண டைந்துள்ளார்.

சரணடைந்த குறித்த நபர், புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவா் எனவும், 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நல்லூர் வீதியில் நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டில் நீதிபதியின் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார்.