Breaking News

தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் விலகல் !

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இரு ந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாகவும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்ல து வேறு தமிழ்க் கட்சிகளுடனோ இணைந்து செயற்படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பின ரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறு ப்பினருமான வெள்ளிமலை என்ற ஞா. கிருஸ்ணபிள்ளை தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்காக 1965ம் ஆண்டிலிருந்து ஒரு தொண்டனாக சேவையாற்றி வந்ததாகவும் இன்று தன்னை அந்தக் கட்சி புறந்தள்ளி வருவதாகவும் தெரி வித்துள்ளார். 

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக உழைத்தவ ர்கள் புறந்தள்ளப்பட்டு பணம் படைத்தவர்களுக்கும் மண் கொள்ளையர்களு க்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.  

பாமர மக்களை கருவேப்பிலை போல் பயன்படுத்திவிட்டு பணம் படைத்தவ ர்களையும் கல்வி மான்களையும் வளப்படுத்துவது பொருத்தமற்றது என்பது டன் வாக்களித்த மக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைவிட்டுள்ளதா கவும் தெரிவித்துள்ளார்.  

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள தனது வீட்டில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் ஞா.கிருஸ்ணபிள்ளை மேற்க ண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.