Breaking News

ரயர் போட்டு கொழுத்துவோம்-பெண் வேட்பாளருக்கு தமிழரசுகட்சி மிரட்டல்(காணொளி)

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு 
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மீது கொலைமிரட்டல் விடுத்ததோடு  ரயர் போட்டு கொழுத்துவோம் என மிரட்டியதோடு நான்கரை மணிநேரமாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் செயற்பாட்டாளர் ஒருவர் வீட்டில் தன்னை தடுத்து வைத்ததாக அச்சறுத்தலுக்கு இலக்காகிய பெண் வேட் பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் புளொட் அமைப்பின் சார்பாக இளங்கோபுரம் விசுவமடுவினை சேர்ந்த மஞ்சுளா என்பவர் போட்டியிடவிருந்தார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் வேட்பாளர் கையெழுத்திடச் சென்ற போது தன்னை தடுத்து வைத்ததாக குறித்த பெண் வேட்பாளர் இன்று காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.



வழக்கு பதிவு செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ள அதேவேளை பெண் வேட்பாளரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் மருத்துவ அறிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பாக தீர்மானிக்க ப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பெண் வேட்பாளரை தடுத்து வைத்திருந்தவர் உயிர் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பின்மை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.