Breaking News

படகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் மீட்கப்பட்டுள்ளனா்.!

சைப்ரஸ் கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதினால் படகில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளனா். 

சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற் பகுதி யில் சுமார் 150 பேருடன் பயணித்த பட கொன்றே இவ்வாறு கடலில் மூழ்கிய சம்பவம் நடைபெற்றுள்ளதுடன்,  பட கில் பயணித்த 19 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் 103 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர். 

மேலும் காணாமல்போன 28 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன. உயிரிழந்தவர்களின் சடலங்களை துருக்கியின் மெர்சின் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இவ் விபத்தில் சிக்கிய அகதிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.