Breaking News

சகோதரியைத் தாக்கியதுடன் சகோதரன் தூக்கிட்டு தற்கொலை.!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தனது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளாா். 

வாழைச்சேனை கண்ணகிபுரத்தினை சேர் ந்த துரைராசா பிரதீபன் என்பவரே நேற்று புதன் கிழமை (18) மாலை தற்கொலை செய்துள்ளாா்.  

கண்ணகிபுரத்தினை சேர்ந்த குறித்த நபர் நேற்று முன்தினம் மாலை பேத் தாழையி லுள்ள தமது உடன் பிறவாச் சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையி லேயே சகோதரியின் வீட்டுக் கூரையில் படுக்கை விரிப்பினால் கழுத்தில் சுரு க்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மேலும் சகோதரியை கத்தியினால் வெட்டி காயத்தினை ஏற்படுத்தியுள்ளது டன் தமது துவிச்சக்கர வண்டியினையும் கையில் வைத்திருந்த கத்தியினால் அடித்து சேதப்படுத்தியுள்ளாா். 

சம்பவத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைக் கல்குடா பொலிசார் முன்னெடுத் துள்ளனா்.