Breaking News

மகிந்த ஆட்சிக்கு வந்த மறு நாளே பார்த்த வேலை! அதிா்ச்சியில் மாணவர்கள்!

நாட்டில் தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நியைில் மகிந்த அரசி னால் ஆட்சிக்கு வந்த மறுநாளே எரி பொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது. பல அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் தொலை தொடர்பு வரிகள் என்பன குறைக்கப்பட்டன.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டாலரின் விலை அதிகரிப்பால் இறக்கு மதி விலைகள் அதிகரித்திருந்த நிலையில் மஹிந்த அரசால் மட்டும் எப்படி எரிபொருள் விலையை குறைக்க முடிந்தது என்பது கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் எரிபொருள் விலையை குறைத்து மக்களின் மனங்களை வெல்ல மஹிந்த அரசு செய்த வேலையால் மறுபுறத்தில் இலங்கை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறந்த திட்டம் கைவிடப் பட உள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு நல்லாட்சியின் தேசிய அரசாங்கத்தில் வழங்க இருந்த இலசவ மடிக்கணினி திட்டத்தினை இரத்து செய்தே மஹிந்த அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது.

இதன் மூலம் பாடசாலை மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மெரு கூட்ட கிடைத்த நல்ல சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. மஹிந்த அரசு நடத் திய நாடகத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரண வக்க தெரிவித்துள்ளாா்.

மஹிந்த மைத்திரியின் இடைப்பட்ட ஆட்சியில் பெற்றோலின் விலை குறைக் கப்பட்டதாக பொதுமக்கள் திருப்தியடையாதீா்கள் சம்பிக்க தெரிவித்துள்ளாா்.