Breaking News

விக்கியிடம் இந்தியா கூறியது என்ன? அதிர்ச்சியில் கஜேந்திரன்!!

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச்சேரவேண்டாமென சி.வி. விக்னேஸ்வரனிடம் இந்தியா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனே தன்னிடம் இத  னைக் கூறியதாக தெரிவித்த கஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவரை கஜேந்திரகுமார் சந்தித்த போது, விக்னேஸ்வரன் நேரடியாக இதனைத் கஜேந்திரக்குமாரிடம் தெரிவித்துள்ளாா்.

தன்னைச் சந்தித்த இந்தியத் தூதரக அதிகாரிகள், நீங்களும் தமிழ் தேசிய மக் கள் முன்னணியினரும் கூட்டுவைத்தால் சுலபமாக நீங்கள் முதலமைச்சர் ஆகிவிடுவீர்கள்; ஆனால் இந்தியா அதனை விரும்பவில்லையென தன்னிடம் கூறியதாக விக்னேஸ்வரன் கஜேந்திரகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ் நல்லூரில் நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன் னணி முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.