Breaking News

பொட்டம்மானிற்கு என்ன நடந்தது - சரத்பொன்சேகா

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என முன்னாள் பிரதியமை ச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன் னாள் இராணுவத் தளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருண ங்களில் தற்கொலை செய்தாா் என சரத் பொன்சேகா தெரிவித்துள் ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட் டனர் அவர்களில் 70 பேர் வரை அவ ருடனேயே கொல்லப்பட்டனர் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஐவருடன் இணைந்து தப்பிச்செல்வதற்கு பிரபாகரன் திட்ட மிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மான் துப்பாக்கிச சூட்டில் காயமடைந்தார் அதன் பின்னர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார் என கேபி தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளாா்.

பொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என தெரிவிக்க ப்படுவது பொய்யான தகவல், என குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா பொட்டு அம்மானின் உடல மீட்கப்பட்டதாக கேபி தெரிவித்திருந்தார் எனவும் தெரி வித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற வேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார்,எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ் வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளி யிடுகின்றார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவ்வேளை புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு நிதி வழங்கியது அவர் அதனை குடித்து அழித்ததாகவும் சரத்பொன்சேகா தெரிவித் துள்ளார்.