Breaking News

மனநலப் பரிசோதனை வேண்டுமாம் மைத்திரிக்கு கா்ச்சிகின்றாா் சரத்பொன்சேகா.!

அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது போன்று ஒவ்வொரு ஆண்டும், இலங்கை ஜனாதிபதியின் மனநிலையைப் பரிசோதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். ”அமெரிக்காவில் அதிபரின் மனநிலை ஒவ்வொரு ஆண்டும் பரிசோதிக்கப் படும் நடைமுறை உள்ளது, இத் தகைய மனநிலைப் பரிசோதனைக்கு, அமெரிக்கா அரசின் மூத்த அதி காரிகளும், இராணுவ அதிகாரிகளும் உட்படுத்தப்படுகின்றனர். ஆகவே இல ங்கையிலும் அத்தகைய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென நான் நினைக்கிறேன். அதற்கேற்ற வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும். அப்படியென்றால் தான், நாட்டை ஆட்சி செய்பவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டால், அவரை உளநல நிபுணரிடம் அனுப்ப முடியும்.” என்றும் தெரிவித்துள்ளாா்.