Breaking News

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பணயக்கைதி அரசாங்கம் என்கிறாா் - விமல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பணயக்கைதியாக அரசாங்கம் மாறியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளாா். 

வடக்கு அபிவிருத்தி அமைச்சை அவர்களுக்கு கீழ் பயன்படுத்தி இன்று வடக்கில் கூட்டமைப்பு இனவாத, பிரி வினைவாத பிரசாரங்களை முன்னெ டுத்துள்ளது.   கூட்டமைப்பின் முன் னாள் மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் முல்லைத்தீவு நயாரு விகா ரைக்கு பலாத்காரமாக நுழைந்து அங் கிருப்பவர்களை எச்சரித்துள்ளனர்.

அத்துடன் கோயில் கட்டப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்டம் நிலை நாட்டப்படுவதில்லை. சுமந்திரனின் கட்டளையின் பிர காரமே வடக்கில் பொலிஸாரும் செயற்படுகின்றனர். அரசாங்கம் கூட்ட மைப்பின் பணயக்கைதியாக இருக்கும் வரை இந்நிலை நீடிக்குமெனத் தெரி வித்துள்ளாா்.