Breaking News

எதிர்ப்புக்களிற்கு மத்தியில் இன்று கூடுகிறது அரசியலமைப்புச் சபை.!

அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் அதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனா்.

பாராளுமன்றம் நேற்று வியாழக் கிழமை காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலை மையில் கூடியது. இதனையடுத்து நடைபெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போது அரசியல‍மைப்பு சபை நாளை (இன்று) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடுமென பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளாா்.

சபாநாயகரின் இவ்வறிவிப்பானது நிலையியல் கட்டளைகளுக்கு முரணான ஒன்றாக காணப்படுவதாக கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் எதிர்ப் பினை தெரிவித்துள்ளனா்.

எனினும் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி அதனை நிராகரித்து ஏற்கனவே அறிவித்தபடி அரசியலமைப்பு சபை கூடுமெனத் தெரிவித்துள்ளாா்.