Breaking News

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சிக்கு விஜயம்.!

புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சிக்கு விஜ யமாகியுள்ளாா்.

அவர் இன்று (10-01-2019) வெள்ளிக் கிழமை காலை கிளிநொச்சிக்கு விஜ யம் மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜ யம் மேற்கொண்ட ஆளுநரை அர சாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழா மினர் வர வேற்பை நிகழ்த்தியுள்ளனா்.

நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஆளுநர், கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதோடு,  கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளாா்.

இதில் முக்கியமாக கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த் தத்தின் பின்னரான நிலைமகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்ததுடன் கிளி நொச்சி மாவட்டத்தின் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார். ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவனும் ஆளுநரின் கிளிநொச்சி விஜ யத்தில் கூடவே விஜயமாகியுள்ளாா்.