Breaking News

ஜனாதிபதி ஊடகங்களுக்கு விடுத்த விசேட எச்சரிக்கை.!

பாதுகாப்பு துறையினரால் வீடுகள் மற்றும் பொது இடங்கள் சோதனையிடப் படும்போது அதனை ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்துவதனை தவிர்க் குமாறு கோரப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமான சம்ப வத்தையடுத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோச னையின் பேரில் பாதுகாப்பு அமைச் சின் கண்காணிப்பு மற்றும் நெறிப் படுத்தலில் நாடளாவிய ரீதியில் பாது காப்பு நிகழ்ச்சித் திட்டமொன்று நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன், வீடுகள், பொது இடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்பான காட்சிகள் ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்தப்படுவதனால் சிலவேளைகளில் பயங்கரவாத நடவடிக்கைகளு டன் எதுவித தொடர்புகளும் அற்றவர்கள் கூட அதில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் நிலை ஏற்படுவதனால் அவர்கள் பெரும் அசௌகரியங்க ளுக்கு உள்ளாகுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சமய தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இக்கோரிக்கை களைக் கருத்திற்கொண்டு சமூகத்தில் எந்தவொரு பிரிவினரும் அசௌகரியங் களுக்கு ஆளாக இடமளிக்காத வகையில் குறித்த சோதனை நடவடிக்கை களை ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கு மாறு அரசாங்கம் அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள் ளது.

அத்தோடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது பாதுகாப்பு துறையினர் அல்லாத ஊடகவியலாளர்களையோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினரையுமோ அதற்காக பயன்படுத்தாதிருக்குமாறு ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன அனைத்து பாதுகாப்பு துறைகளுக்கும் தெளிவான அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டுள்ளது.