Breaking News

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தீர்மானம்.! (காணொளி)

இராஜினாமாச் செய்த முஸ்லிம் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று நடைபெற்ற கலந்துரையாட லின் போது இத் தீர்மானம் எடுக்கப் பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளாா்.
  பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் இன்றைய தினம் இக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பி னர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அமீர் அலி உள்ளிட்ட பலர் இக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.