Breaking News

அர்ச்சனாவை கதறவிட்ட பிக் பாஸ் டாஸ்க்.. தினுசு தினுசா யோசிக்கிறீர்களேப்பா!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அனுதினமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறுவதே இல்லை. இதற்காக வார வாரம் ஒரு டாஸ்கை கொடுத்து வீட்டில் தீ மூட்டி விடுவார் பிக்பாஸ். 

அந்தவகையில் இந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டில் உள்ள 12 பேரும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ரோபோகளாகவும், மனிதர்களாகவும் தங்களுடைய டாஸ்கில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில் நேற்றய எபிசோடில் அர்ச்சனாவை, வீட்டிலுள்ள போட்டியாளர்கள் கடுப்பேற்றி கதறவிட்ட நிகழ்வு பிக்பாஸ் ரசிகர்களிடையே பெருமளவு பேசப்பட்டு வருகிறது.  

அதாவது ரோபோ டீமை சேர்ந்தவர்களுக்கு கோபம், அழுகை, சோகம் என ஏதாவது ஒரு உணர்ச்சியை மனிதர்கள் டீம் கொண்டு வரவேண்டும் என்பதுதான் டாஸ்க். இதற்காக மனிதர்கள் டீம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர்.  

மேலும் ரோபோ டீமை சேர்ந்த அர்ச்சனாவிடம் இருந்து உணர்ச்சிகளை வெளிக் கொணர வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டனர்.  

ஆனால் நிஷா ஒரு படி மேலே போய் அர்ச்சனா அப்பாவின் மரணத்தை பற்றி பேசி, அவரது உணர்ச்சியைத் தூண்டினார். அப்போதும்கூட அர்ச்சனா நிதானமாகவே பதில் சொன்னார்.   

மேலும், நேற்றைய டாஸ்க் முடிந்தபிறகு அர்ச்சனா கண்ணீர்விட்டு கதறியது வீட்டில் உள்ள பலரை அதிர்ச்சி அடைய செய்தது. அதுவும் அர்ச்சனா அண்ட் கோவை சார்ந்த நிஷாவே அவரை இவ்வாறு தூண்டி இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.