ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் கண்டுபிடிப்பு
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் என கருதப்படும் 53 வானங்கள் புறக்கோட்டைப் பகுதியில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீஜெயவர்த்தனபுர களஞ்சியசாலையில் இருந்து குறித்த 53 வாகனங்களும் மீரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமானவை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான நூற்றுக்கணக்கான வாகனங்கள் காணாமல் போயுள்ளன. இந்தநிலையில் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தான 200 வானங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திபால உத்தரவிட்டுள்ள நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








