காலநிலையில் மாற்றம் ! அதிக மழை வீழ்ச்சி பரவலாகும் சாத்தியக்கூறு.!

மேல், கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழைபெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணி த்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த காற்று வீசு மென எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலி கமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களி னால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்க ளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரை கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். குறித்த சந்தர்ப்ப ங்களில் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.