Breaking News

தனித்து ஆட்­சி­ய­மைக்க சந்­தர்ப்பம் வழங்குங்கள்.!

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினால் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடியும் என்­பதால் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு சந்­தர்ப்பம் தாரு ங்கள் என ஐ.ம.சு.வின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் நேற்­றி­ரவு கேச­ரி­யிடம் கருத்து வெளியிட்ட அமை ச்சர் மஹிந்த அம­ர­வீர, சுதந்­திரக் கட்­சி­யி­னதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னதும் தீர்­மா­னத்­திற்கு அமை­யவே இந்த முடிவு எடுக்­கப்­ப ட்டு ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பப்­பட்­ட­தாக தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களின் பின்னர் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மை­யை­ய­டுத்தே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இந்தக் கோரிக்­கையை முன்­வைத்­தி­ருக்­கி­றது.  ஏற்­க­னவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பதவி வகிக்கும் அர­சாங்­கத்தில் தாம் அங்கம் வகிக்கப் போவ­தில்லை என சுதந்­திரக் கட்­சி­யினர் கூறி வரு­கின்­றனர். ஆனால் ஐக்­கிய தேசி யக் கட்­சி­யினர் பிர­தமர் பத­வியில் ரணில் விக்­ர­ம­சிங்க நீடிக்க வேண்டுமென வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். 

இந் நிலையில் தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை தொட ர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னரும் இரண்டு பக்­கங்­களில் இருந்து கொண்டு தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். 

இந்த நிலையிலேயே ஐ.ம.சு.வின் செயலாளர் மஹிந்த அமரவீர தனித்து ஆட்சியமைக்க சந்தர்ப்பம் தருமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரி க்கை விடுத்துள்ளார்.