Breaking News

தங்களது உறவுகளை நினைவுக்கூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்!

தங்களது உறவுகளை நினைவுக்கூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையிலும், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தங்களது உறவுகளை நினைவுக்கூர முடிந்தது.  

அந்தநிலைமை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.  

மீண்டும் யுத்தம் ஒன்றையோ பயங்கரவாத செயற்பாடுகளையோ விரும்பாத மக்கள், போர்காலத்தில் உயிர்நீத்த தங்களது உறவினர்களை நினைவுகூரும் உரிமையை கொண்டிருக்கின்றனர்.  

அந்த உரிமையை உறுதி செய்வதன் மூலும் சிறந்த தலைவர் என்ற மதிப்பை ஜனாதிபதியால் தமிழ் மக்கள் மத்தியில் பெற முடியும் என்று எஸ்.சிறிதரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.