Breaking News

கூட்டமைப்பின் இந்திய சந்திப்பு -கூட்டமைப்புக்குள் குழப்பமா ?


எதுவுமே இல்லாத 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து
பேசுவதில் எவ்விதப் பயனும் இல்லை. அது மக்களுக்கு செய்யும் துரோகம்! அனந்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை தான் பத்திரிகை வாயிலாகவே அறிந்துகொண்டதாக வட மாகாண சபை தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

எதுவுமே இல்லாத 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து பேசுவதில் எவ்விதப் பயனும் இல்லை, அது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்தியப் பயணம் குறித்து விளக்கமளித்தார். 

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய அரசின் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய பயணம் பற்றியும், 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்த இந்தியா மேற்கொள்ளும் முயற்சி குறித்தும் எமது செய்தியாளர், அனந்தி சசிதரனைத் தொடர்புகொண்டு கேட்டார்.


அனந்தி சசிதரனுடனான முழுமையான பேட்டி