Breaking News

சுமந்திரனோடு இளைஞர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)


நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை அடுத்து வேட்பாளர்கள் மக்கள்
சந்திப்புக்களை நடாத்தி வருகின்றனர் அந்த வகையில் மக்களை சந்திப்பதற்காக மாகாணசபை உறுப்பினர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு சென்ற சுமந்திரனுக்கே இந்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் விடயங்களை தெளிவுபடுத்த சென்ற சுமந்திரனிடம் இளைஞர்கள் காரசாரமான கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக தொடுத்தனர். 

எதற்காக சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு சென்றீர்கள்? இன்னும் எவ்வளவு காலத்தில் தமிழர்களுக்கான தீர்வை பெற்று தருவீர்கள்? ஈழ விடுதலைப்போடாட்டத்தை செய்தவர்களை ஏன் மதிப்பதில்லை. சுதந்திரதினத்திற்கு போனதன்மூலம் ஒற்றையாட்சியை ஏற்கின்றீர்களா? இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகள் அதற்கு சுமந்திரனால் பலிலளிக்கமுடியாமல் திணறியதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.