Breaking News

அமெரிக்காவின் குடும்ப கட்டுப்பாட்டு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

மத்திய அமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

குடும்ப கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றில் திடீரென்று உள்நுழைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளார். 

இதில் ஒரு பொலிஸ்காரர் உட்பட இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 5 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். 

சுமார் ஐந்து மணி நேரம் வரை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அந்த நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மர்ம நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.