Breaking News

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதான தடை விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்க முதன் முறையாக ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் இந்த அமைப்புகளின்  தடை நீக்கம் தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேலிடம் ஐரோப்பிய யூனியன் கருத்து கேட்டி ருந்தது.

இரு நாடுகளும் குறித்த அமைப்புகளின் மீதான தடையை நீக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இரு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தடைப்பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ்அமைப்புகளின் பெய ர்களை நீக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.