Breaking News

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி மைத்திரிக்கு ஏற்பட்ட நிலை!



சமூக வலைத்தளங்களில் தான் கடுமையாக விமர்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படும் சுதந்திரம் காரணமாக சமூக வலைத்தளங்கள், பத்திரிகை மற்றும் வானொலியில் தான் விமர்சிக்கப்படுவதாக மக்களுக்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அவ்வாறு விமர்சித்தாலும் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை நிறைவேற்றுவேன். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு நிறைவேற்றப்படும்.

இலஞ்சம், ஊழல் முறைக்கேடு அற்ற ஆட்சியை கொண்ட நாடாக இந்த நாடு மாற்றமடையும். என்னை ஜனாதிபதியாக்கிய மக்களின் முதல் எதிர்பார்ப்பு அதுவாகும்.

இன்றைய தினம் பேஸ்புக்கை பார்த்தால் ஜனாதிபதி எவ்வாறு விமர்சனத்திற்குள்ளாகின்றார் என தெரியும். எனினும் அந்த சுதந்திரம் தொடர வேண்டும். எனினும் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.