Breaking News

மாவீரர் நாளை அனுஸ்ட்டித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

மாவீரர் நாளை அனுஸ்ட்டித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதி மற்றும் சட்ட ஒழுங்குகள் துறை சார்ந்த அமைச்சுகளும், காவற்துறையினருமே என்று சுட்டிக்காட்ட ப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 27ம் திகதி போரினால் உயிரிழந்த தங்களின் உறவினர்களை நினைவுக் கூறும் செயற்பாடுகளில் வடக்கு, கிழக்கில் பொது மக்கள் ஈடுபட்டனர். 

ஆனால் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நினைவுகூறப்படுவது சட்ட விரோதமானது.எனினும் இது இராணுவத்துடன் தொடர்பு பட்டதில்லை.இது தொடர்பில் காவற்துறையினரும், சட்டத்துறை அமைச்சுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.