Breaking News

உயர்கல்விக்கான கடன்வசதிகள் இலங்கைக்கு சிறந்த முதலீடாக அமையும்: பிரதமர்.

உயர்கல்விக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதானது எதிர்கா லத்தில் வளமான இலங்கையைத் தோற்றுவிப்பதற்கான முதலீடாக அமை யுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். 

ஹோமாகம தியகம பிரதேசத்தில் நிறுவப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மொரட்டுவ பல்கலைக்கழக த்திற்காக ஹோமாகம தியகம பிரதேசத்தில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  

அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட அடிப்படை கல்வி கட்டாயமாக்கப்பட வுள்ளது. இந்தக் காலப்பகுதியில் இறுதி இரண்டு வருடங்களில் சகல மாணவர்களுக்கும் கணனிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

தொழில் கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். NDT தொழில்நுட்ப நிறுவகத்தில் உயர்கல்வி தொடரும் மாணவர்கள் பொறியியல் பட்டத்தைப் பெறுவதற்கான அமைப்பைத் தோற்றுவிப்பதும் இங்கு அவசிய மாகும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.