Breaking News

தூத்துக்குடி ஆட்சியர் வளாகத்தில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு(காணொளி)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வௌியிடப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வன்முறை நடைபெற்றதாகவும், இதன் காரணமாகவே எதிர்வினையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஆட்சியரக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த காட்சியில் போராடடக்காரர்கள் கல்லெறிந்து தாக்குவது போன்றும், போலீஸார் தப்பி ஓடுவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.