Breaking News

யாழில் வியாபார நிலையம் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள் ளது. 

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்கு தலை நடத்திவிட்டு கடை உரிமையா ளரை மிரட்டிச் சென்றுள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனா்.

கோண்டாவில் உப்புமடம் சந்தியி லுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீதே நேற்றிரவு இரவு 7.15 மணியளவில் இத் தாக்குதல் நடைபெற்றுள் ளது.

வியாபார நிலையத்துக்குள் புகுந்த கும்பல் பொருட்களை அடித்துச் சேதப் படுத்தியதுடன், பல சரக்குப் பொருள்களை சிந்தி சேதாரப்படுத்திச் சென்றது. அத்துடன், வியாபார நிலையத்தின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச் சக்கர வண்டியையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டு கும்பல் தப்பித்ததாக கடை யின் உரிமையாளர் தெரிவித்துள்ளாா்.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர் பில் அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.