Breaking News

முதலமைச்சருக்காக ஆரம்பிக்கப்பட்டதே ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் -அனந்தி,!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படுவோர் மற்றும் வெளி யேறுவோர் தமக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித் துள்ளாா். 

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியேறலாம் என ஊகங்கள் வெளியி டப்பட்டுவரும் நிலையில் அவர் இக் கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச் சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சி யொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.

இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வும் கொள்கைப் பிரகடன வெளியிடும் நிகழ்வும் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஹோட்டலில் இன்று முற்பகல் நடைபெற்றது. மதத் தலைவர்களின் ஆசியுரையுடன் கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்படும் அனந்தி சசிதரனால் கொள்கைப் பிரகடனமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தனது தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கட்சியின் அங்குரார்ப் பண நிகழ்வில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளி யேறுவோருக்கான தளமாக தமது கட்சி செயற்படுமெனத் தெரிவித்துள்ளாா்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி மூன்ற வருடங்கள் சென்றுள்ள போதி லும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத்தர வில்லையென குற்றம் சுமத்தியுள்ளாா்.