Breaking News

படைப்புழுவை ஒழிப்பதற்காக திவீர திட்டம்.!

நாடு முழுவதும் பயிர் செய்கைகளை அழித்து வரும் சேனா படைப்புழுவினை ஒழிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 வகையான பரிந்துரைகளை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள் ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுயதயாரிப்பு முறை மூலம் படை ப்புழுவினை ஒழிப்பதற்கான பரிந்து ரைகளை சில விவசாயிகள் முன் வைத்துள்ளதாகவும், அவற்றை பரி சோதனைக்குட்படுத்தி விவசாய காணிகளுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் படைப்புழுவை ஒழிப்பதற்கான ஏதேனும் முறைமைகள் இருக்கு மானால் விவசாய திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள் ளனர். இதேவேளை படைப்புழுவினை ஒழிப்பதற்காக ஐந்து வகையான கிருமி நாசினிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.