Breaking News

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் சிறுமி பலி.!

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி ஒருவர் கிண ற்றில் வீழ்ந்து  நேற்று பிற்பகல் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளாா்.

பாதுகாப்பற்ற குறித்த கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக உறவி னர்கள் தெரிவித்துள்ளனர். அன்னை சாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடி யாதவர் என்றும், தாயின் உழைப்பிலேயே வாழ்க்கை நடப்பதாகவும் உயிரி ழந்த சிறுமியான டிலானி குடும்பத்தின் மூத்த பிள்ளை எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

டிலானியின் இறுதிக் கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் குடும்ப வறுமை காணப்பட்டுள்ளது.