Breaking News

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி.!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத் தின் மொத்த மதிப்பீட்டு செலவு 4 ஆயிரத்து 770 பில்லியன் ரூபா என, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 4.8 வீதமாக அமையவுள்ளதாகவும் இந்த வருடத்தில் அரச வரு மானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15 வீதமாக அதிகரிப்படுமென நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடன்களை செலுத்துவதற்காக இவ் வருடம் வரவுசெலவுத் திட் டத்தில் 2 ஆயிரத்து 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில, வர லாற்றில் அரசாங்கத்தினால் கடன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாரிய தொகை இதுவென நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.