Breaking News

யாழ்.குருநகர் திருத்த வீடுகளை திறந்து வைத்தார் அமைச்சர் வீரவன்ச

யாழ்ப்பாணத்தில் புனரமைப்புச் செய்யப்பட்ட
குருநகர் தொடர் மாடிக் குடியிருப்பை இன்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைத்தார். இன்று முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ்.மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, மற்றும் சர்வமதத் தலைவர்கள் எனப் ஆழும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

யுத்த காலத்தில் செல் தாக்குதல்களாலும் குண்டுத் தாக்குதல் அகப்பட்டு மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் சேதமடைந்திருந்த 160 வீடுகளைக் கொண்ட இந்தக் குடியிருப்புத் தொகுதி, மீளப் புனரமைக்கப்பட்டு தற்போது அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



முன்னர் இருந்த குடியிருப்பு தொகுதி