Breaking News

தமிழர் தரப்பின் நிதானம் - திரு­மலை நவம்


தமி­ழர்கள் செய்த தவறை நாம் செய்ய முடி­யாது.
சிங்­க­ள­வரை அர­வ­ணைத்துச் செல்ல வேண்டும். உணர்ச்சி பூர்­வ­மான தலைமை முஸ்லிம் மக்­க­ளுக்கு தேவை­யில்லை என்ற கருத்தை வலுப்­ப­டுத்தி உற்­பத்தித் திறன் ஊக்­கு­விப்பு அமைச்­சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ள­ரு­மான பஷீர் சேகு­தா வூத் அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார். 

அவர் தனது கருத்தில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது; 

இன்று முஸ்லிம் மக்­க­ளுக்கு தேவைப்­ப­டு­வது உணர்ச்சி பூர்­வ­மாக தொழிற்­படும் தலை­மைத்­து­வ­மல்ல. சிந்­தனை பூர்­வ­மாக தொழிற்­படும் தலை­மைத்­து­வமே தேவை. கடந்த பல தசாப்த கால­மாக தமிழ் மக்கள் தமது உரி­மைக்­காகப் போரா­டினர். ஆனால் இது வரை அது வெற்றி பெற்­ற­தாக தெரி­ய ­வில்­லை­யென்ற கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உண்­மையின் அடிப்­ப­டை­யிலும் தனது அனுபவப் பூர்­வ­மான கருத்தைபட்­ட­வர்த்­த­ன­மாக சொல்­லி­யி­ருந்தார். 

அமைச்­சரின் இந்தக் கருத்து தமிழ் மக்கள் பற்­றிய பின்­வரும் கருத்­துக்­களை அழுத்­த­மாக பதிவு செய்­துள்­ளது. ஒன்று தமி­ழர்கள் தவறு செய்­வ­தையே பழக்­க­மா­கவும் வழக்­க­மா­கவும் கொண்­ட­வர்கள். இன்­னொன்று தமி­ர்­க­ளு­டைய தலை­மைத்­துவம் என்­றுமே உணர்ச்­சி­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டது. மற்­றொன்று இந்த இரண்டு விட­யங்­க­ளையும் முஸ்லிம் மக்­களோ அல்­லது அவர்­களின் அர­சியல் தலை­மைத்­து­வமோ என்­றுமே செய்யப் போவ­தில்­லை­யென்ற தெளி­வான கருத்தைப் பகிர்ந்து கொண்­டுள்ளார். 

இலங்­கையின் சுதந்­திரப் போராட்ட காலம் தொட்டு இன்று வரை­யுள்ள ஆறரை தசாப்த கால அர­சியல் போக்கு, பொரு­ளா தார போக்கு, சமூகப் போக்கு என்­ப­வற் றின் விப­ரங்­களும் விளக்­கங்­களும் தெரி­யா­ததொரு விட­யமல்ல. இலங்­கையின் அர­சியல் போராட்ட வர­லாற்றில் போராட்டம் என்ற பதம் 1956 ஆம் ஆண்டு வரை அல்­லது 1958ஆம் ஆண்டு இனக்­க­ல­வரம் என்ற பூதம் புறப்­ப ட்ட காலம் வரை எந்­த­வித கன­தியும் பெற்­றி­ருக்­க­வில்லை. 

தமிழ் மக்கள் எங்­கி­ருந்து அல்­லது எந்த இடத்­தி­லி­ருந்து அல்­லது எந்த சந்­தர்ப்­பத்­தி­லி­ருந்து தவறை இழைக்க முற்­பட்­டார்கள் என்­பதை கண்டு கொள்ள வேண்­டிய தேவை தமிழ் மக்­க­ளுக்கும் இன்­னு­மொரு புறம் சிறு­பான்மை சமூ­கத்­துக்கும் அவ­சி­ய­மான ஒரு விட­யந்தான். 1919 ஆம் ஆண்டு தமி­ழர்­களும் சிங்­கள மக்­களும் இணைந்து தேசிய காங்­கி­ரசை நிறு­வி­னார்கள். சேர் பொன்.அரு­ணா­சலம் பேரின சமூ­கத்தின் இணக்க உடன்­பாட்­டுடன் தேசிய அர­சி­யலே நடத்திச் செல்ல வேண்டும். 

அர­சியல் திட்­டத்தின் சம்­பள உரிமை நிலை­நி­றுத்த வேண்­டு­மென நிறு­வப்­பட்ட தேசிய காங்­கி­ர­சுக்கு பூரண ஆத­ரவு வழங்­கினார். நடந்­தது என்ன சேர் பொன் அரு­ணா­ச­லமும் அவ­ரது சகோ­தரர் சேர் பொன் இரா­ம­நா­தனும் இலங்கை தேசிய காங்­கி­ரஸில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்கள். இவர்கள் இழைத்த தவறு பேரினச் சமூ­கத்தை அர­வ­ணைத்து செல்ல வேண்­டு­மென்ற உயர்ந்த தத்­துவ ஞானம் 1948 இல் பிர­ஜா­வு­ரிமைச் சட்டம் கொண்­டு­ வ­ரப்­பட்ட போது ஜி.ஜி. பொன்­னம்­பலம், ராம­லிங்கம் மற்றும் கன­க­ர த்­தினம் ஆகிய மூவரும் அப்­பி­ரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தார்கள். 

காரணம் டி.எஸ். சேன­நா­யக்­காவின் தலை­மை­யி­லான தேசிய சமூ­கத்­துக்கு ஆத­ரவு வழங்க வேண்­டு­மென்ற நோக்கம். அவர்கள் அன்று செய்த தவறின் கார­ண­மாக இன்று வரை மலை­யக சமூ­கத்தின் எதி­ரி­க­ளாகப் பேசப்­ப­டு­வது வழக்­க­மா­கி­விட்­டது. 1956 ஆம் ஆண்டு (15.6.1956) சிங்­களம் மட்டும் அர­ச­க­ரும மொழி என்னும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. இது கொண்டு வந்த பாரிய நன்மை 1958 ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ர­மென்னும் திரு­வி­ழாவைக் கொண்டு வந்­தது. இதை தமி­ழர்கள் யாரும் கைநீட்டி வர­வேற்­க­வில்லை. இந்­நாட்டின் இனக் குரோ­தத்தின் முத­லா­வது கோரத் தாண்டம் முதல் முறை ஆடப்­பட்­டது. 

இதற்கு முன் 1915 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய சாம்­­ராஜ்­சியம் இலங்­கையைக் கட்­டி­யாண்ட காலத்தை முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக மூண்­ட­இனக் கல­வ­ரத்தின் மூலச் சம்­பவம் பௌத்த மத ஊர்­வ­லமும் கொண்டு வந்­ததன் விளைவை கம்­பளை மக்கள் மறந்து விட முடி­யாது. இதன் பின்னே அடுக்­க­டுக்­காக நடந்த எல்லாச் சம்­ப­வங்­களும் அர­சியல் மாற்­றங்­க ளும் அறி­யப்­பட்­ட­வொன்றே. பண்டா -–செல்வா ஒப்­பந்தம் டட்லி –- செல்வா ஒப்­பந் தம், 1973 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பல்­க­லைக்­க­ழக தரப்­ப­டுத்தல், 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கல­வரம் என்ற இன்­னோரன்ன இனக்­கு­றுகல் நிகழ்­வுகள் தமிழ் மக்­களை மாத்­திரம் பாதித்த சம்­ப­வங்­க­ளாக இருக்­கலாம். 

இவை­யெல்லாம் தமிழ் மக்கள் செய்த தவ­று­களின் பாடங்கள் என்று சொல்­வது எந்­த­ளவு கோல்­கொண்டு அளக்­கப்­ப­டு­கி­றது என்று தெரி­ய­வில்லை. 1983 ஆம் ஆண்­டுக்கு பின் உரு­வாகிக் கொண்ட ஆயுதப் போராட்ட முனைப்­புக்கள் பல்­வேறு பரி­மா­ணங்­களைக் கொண்­ட­தாக ஆகிக் கொண்­டதன் விளைவு சிறு­பான்மை சமூ­கங்கள் மீது மேலா­திக்க சமூ­கமும் அர­சி யல் தலை­மைத்­து­வமும் செலுத்­திய சுட்­டூ­ழி­யங்­க­ளையும் அநீ­தி­க­ளையும் சர்­வ­தேச மயப்­ப­டுத்த கார­ண­மா­கி­யது என்­ப­தாகும். 

1983 ஆம் ஆண்டு வரை உள்­நாட்­டுக்குள் மாத்­திரம் வட்டம் போட்டுச் சுழன்று கொண்­டிருந்த சிறு­பான்மை சமூ­கத்­துக்­கெ­தி­ரான அடக்கு முறை­களும் ஒடுக்­கு­வா­தங்­களும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரை பதி­யப்­பட்­டி­ருப்­ப­தற்­கு­ரிய பரி­ணா­மத்தை தந்­தி­ருக்­கி­றது என்­பது மாத்­தி­ர­மல்ல அண்­மையில் நடந்த அட்­டூ­ழி­யங்­களை குறிப்­பாக முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக கொழுந்து விட்­டெ­றிய ஆரம்­பித்­தி­ருக்கும் இன­வாத தீயை முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் சர்­வ­தேச சமூ­கத்­துக்கு எடுத்து இயம்ப வழி­வ­குத்­தி­ருக்­கி­றது. 

திம்பு பேச்­சு­வார்த்­தையில் எங்­க­ளையும் அழைத்­தி­ருக்க வேண்­டு­மென கோரிக்கை விடப்­பட்ட காலத்­தி­லி­ருந்து கிழக்­குக்கு ஒரு அலகு வேண்­டு­மென்று தீட்­சண்­யத்­துடன் போராடி இன்று கிழக்கு குறித்த ஒரு சமூ­கத்­துக்கே உரி­யது என பேச­வைத்­தி­ருக்கும் நிலையை உரு­வாக்­கிய பின்­ன­ணிகள் என்ன என்­பதை தீர்க்க முனைப்­புடன் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் செல்லாக்காசு எனப் பேசப்­படும் நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தற்கு தமிழ் மக்கள் விட்ட தவ­று­களே கார­ண ­மென்­பது அப்­பட்­ட­மான உண்­மை தான். 

கறையான் புற்­றெ­டுக்க கரு ­நாகம் குடி கொண்ட கதை போல் ஆகி­விட்­டது. 

தமிழ் மக்­களின் இன்­றைய பரி­தாப நிலை. தமி­ழர்­களின் தலை­மைத்­துவம் எப்­பொ­ழுதும் உணர்ச்சிபூர்­வ­மாக காணப்­ப­டு­வதன் கார­ண­மா­கவே அது தனது இலக்கில் இது வரை வெற்­றி­பெற்­ற­தாகத் தெரி­ய­வில்­லை­யென்ற ஆக்கபூர்­வ­மான கருத்­தொன்று தெளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அறிவு பூர்­வ­மற்ற நிதான பூர்­வ­மற்ற அதே­வேளை தீர்க்­க­த­ரி­சன மற்ற தலை­மைத்­து­வத்­தையே தமிழ் மக்கள் இது வரை கொண்­டி­ருக்­கி­றார்கள். இன்னும் வைத்­தி­ருக்­கி­றார்கள் என்ற விமர்­சன பூர்­வ­மான கருத்­தொன்று சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. 

சுதந்­தி­ரத்­துக்குப் பின் இலங்கைத் தமி­ழர்­க­ளுக்கு தலைமை தாங்­கிய தலை­மைத்­து­வ­மென்ற வகையில் ஜி.ஜி. பொன்­னம்­பலம் தந்தை எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம் இதன் பின் ஆயுதப் போர் தொடங்­கிய காலத்தில் பல தலை­மை­களை வட­கி­ழக்கு மக்கள் கண்­டி­ருக்­கி­றார்கள். அகிம்சை வழிப் போராட்டம், அற­வழிப் போராட்டம் அர­சியல் வழிப் போராட்டம் என்ற இரு­கைங்­க­ரி­யங்­களில் சுதந்­தி­ரத்­துக்­குப்பின் தலைமை தாங்­கி­ய­வர்கள் என்ற வகையில் தந்தை செல்­வ­நா­யகம் ஜி.ஜி. பொன்­னம்­பலம் ஆகிய இரு­வரும் முதன்மை பெற்­ற­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள். 

இவ்­வி­ரு­வ­ரது அர­சியல் ஞானம் கல்விப் புலம் சமூ­கத்­தளம் தலை­மைத்­துவ ஆளுமை என்­ப­வை­யெல்லாம் யாருக்­கா­வது எடுத்துக் கூறு­வ­தாக இருந்தால் அது கொல்லன் தெருவில் ஊசி­விக்­கிற கதை­யா­கி­விடும். இவர்கள் உணர்ச்சிச் செருக்கு மிக்­க­வர்­க­ளாக தமது சமூ­கத்தை வழி­ந­டத்­தி­னார்­களா என்­பது இங்கு எழுப்­பப்­ப­டு­கின்ற கேள்­வி­யாகும். மகாத்மா காந்­தியின் அகிம்சை வாதத்தை பூர­ண­மாக ஏற்றுக் கொண்டு காந்­தியை விட ஒரு படி மேலாக உள்­நாட்டு பேரி­ன­வா­தி­க­ளுடன் போரா­டி­யவர் தந்தை செல்­வ­நா­யகம். 

ஆங்­கில ஏகா­தி­பத்­தி­யத்­துடன் முரண்­பட்ட மகாத்மா காந்­திக்­கி­ருந்த சவால்­க­ளை­ விட உள்ளூர் பேரி­ன­வா­தி­க­ளுடன் அகிம்சை போரை மிக நிதா­ன­மா­கவும் கவ­ன­மா­கவும் காத்­தி­ர­மா­கவும் செய்து காட்­டிய தந்தை செல்­வ­நா­யகம் உணர்ச்­சியை எந்த இடத்­தி­லா­வது கொட்­டி­ய­தாக வர­லாற்றில் எந்த இடத்­திலும் பதி­யப்­ப­ட­வில்லை. இவ­ரு­டைய தலை­மைத்­து­வத்தின் உன்­னத நிலையால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டதன் கார­ண­மா­கவே முஸ்லிம் காங்­கி­ரஸின் பிதா­மகர் அஷ்ரப் அவரை குரு­வாக ஏற்றுக் கொண்டார். 

1960 களில் பொத்­துவில் தொகு­தியில் போட்­டி­யிட்டு தோற்­க­டிக்­கப்­பட்ட சேர் ராசிக் பரீத் மட்­டக்­க­ளப்பில் போட்­டி­யிட்டு (1965) தோற்றுப் போன மக் கான் மரைக்கார் மற்றும் அல் ஹாஜ் காரி­யப்பர் அல்ஹாஜ் முக­மது அலி (மூதூர்), ஏ.எல்.அப்­துல் ­மஜீத், ஜனாப் முஸ்­தப்பா, எம்.அப்துல், மஜீது ஜனாப் எம்.சி.அக­மது ஆகியோர் தந்தை செல்வா தலை­மை­ தாங்கிய தமி­ழ­ரசுக் கட்­சியில் சேர்ந்து கொண்­டதும் காலப்­போக்கில் அர­சாங்­கங்­க­ளுடன் இணைந்து கொண்­ட­மையும் மறுக்க முடி­யாத வர­லாற்று ஆதா­ரங்கள். 

தந்தை செல்வா தேசிய உடன்­பாட்­டு­டைய அர­சியல் போக்கை அனு­ச­ரித் துப்போக வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே பண்டா – செல்வா உடன்­ப­டிக்­கை­யையும் (27.07.1957) பண்டாரநாயக்கா – டட்லி செல்வா ஒப்­பந்­தத்தை (24.03.1965) ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­து­டனும் செய்து கொண்­டது மட்­டு­மன்றி 1965 ஆம் ஆண்டு டட்லி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தில் தந்­தை­ய­வர்கள் தமிழரசுக்கட்சி சார்பில் திருச்­செல்வத்தை உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக்க உடன்­பாடு காண முனைந்தார். 

கேவலம் நடந்த­தென்ன? கோணேஷர் கோவிலை புனித நக­ராக ஆக்­கு­வதை நான் எதிர்க்­கின்றேன் என ஒரு பௌத்த விகா­ரா­தி­பதி தனது எதிர்ப்பைக் காட்­டி­யதன் கார­ண­மாக ஒட்­டி­யி­ருந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்­து­வெ­ளி­யேற வேண்டி­யி­ருந்­தது. இங்கு தமிழ்த் தலை­மைத்­து­வங்கள் உணர்ச்சி வசப்­பட்­டன தமிழ்த் தலை­மைத்­து­வத்தின் மாபெ­ரிய தவறு தான். தமி­ழர்­க­ளுக்கு தலைமை தாங்­கிய இன்­னு­ மொரு தலை­வ­ராக விளங்­கி­யவர் ஜி.ஜி.பொன்­னம்­பலம் அவ­ரது அர­சியல் புலமை மொழி ஞானம் தல­மைத்­துவ செருக்கு எல்லாம் அறி­யப்­பட்ட ஒரு விட­யமே. 

1952 ஆம் ஆண்டு டட்லி சேன­நா­யக்­கா வின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்தில் ஜி.ஜி.பொன்­னம்­பலமும் கே.கன­க­ரத்­தினமும் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக் கொண்­டார்கள். டட்லி சேன­நா­யக்­காவின் பதவி வில­க லைத் தொடர்ந்து சேர் ஜோன் கொத்­த­லா­வலை ( 12.10.1953) பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­றதைத் தொடர்ந்து தமிழ் மக்­க­ளுக்கு என்ன நடந்­தது? தமி­ழர்­களை அர­சாங்­கத்தில் இணைப்­ப­தனை ஆரம்­ப­காலம் முதல் உள்­ளேயும் வெளி­யேயும் விரும்­பாது எதிர்ப்புக் காட்டிக் கொண்­டி­ருந்த ஜோன் கொத்­த­லா­வலை அர­சாங்­கத்­தி­லி­ருந்து பொன்­னம்­பலம் கன­க­ரத்­தினம் ஆகியோர் 1954 ஆம் ஆண்டு அர ­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றி­னார்கள் என் பதை விட வெளி­யேற்­றப்­பட்­டார்கள். 

1965 ஆம் ஆண்டு மீண்டும் டட்லி சேன­நா­யக்­காவின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி யக் கட்சி அர­சாங்கம் ஆறா­வது பாரா­ளு ­மன்றத்தை அமைத்துக் கொண்­டது. ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்தின் தலை­மை­யிலான தமிழ்க்­காங்­கிரஸ் மீண்டும் இணைந்து கொண்­டது உடுப்­பிட்டி தேர்தல் தொகு­தி யில் போட்­டி­யிட்டு அமோக வெற்றி கொண்ட மு.சிவ­சி­தம்­பரம் இப்­பா­ரா­ளு­மன்­ற த்தில் உப சபா­நா­யகர் பத­வியை ஏற்றுக் கொண்­டதுடன் உள்ளும் புறமும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு நிறை­வான ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தது. 

மறு­புறம் தந்தை செல்­வ­நா­ய­கத்தின் தலை­மை­யி­லான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி 14 இடங்­களில் வட கிழக்கில் வெற்றி பெற்­ற­துடன் மறை­மு­க­மான உடன்­பாட்­டுடன் டட்லி – செல்வா உடன்­ப­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்த உடன்­ப­டிக்­கையில் கூறப்­பட்­ட­தெல்லாம் வட கிழக்கு மாகா­ணத்தில் பிராந்­திய சபைகள் அமைக்க இணக்கம் காணப்­பட்­டது. அத்­துடன் வட கிழக்கில் தமிழ் மொழியை அமு­லாக்­கு­வது சிங்­கள குடி­யேற்­றங்கள் இனிமேல் செய்­யப்­ப­டு­வ­தில்­லை­யென்ற உடன்­பாட்­டுடன் செய்­யப்­பட்ட டட்லி – -செல்வா ஒப்­பந்தம் தமிழ் மொழி விசேட ஏற்­பா­டுகள் பாரா­ளு­மன்­றத்தில் (08.01.1966) கொண்­டு­வ­ரப்­பட்ட போது நாட்டில் வன்­செ­யல்கள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. 

நாட்டில் அவ­ச­ர­கால நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டதும் இதனைத் தொடர்ந்து 1968 ஆம் ஆண்­டுடன் டட்­லி– ­செல்வா உடன்­ப­டிக்கை கிழித்­தெ­றி­யப்­பட்­டது. இவ்­வாறு தமிழ்த் தலை­வர்­களின் உணர்ச்­சி­ம­ய­மான போக்­குகள் கார­ண­மா­கவே அவர்கள் இந்த நாட்டில் அந்­நி­ய­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். தங்­க­ளது கௌர­வத்­தையும் சுயா­தீ­னத்­தையும் இனத்­து­வக்­க­லாசா­ரத்­தையும் பிர­தேச வாண்­மை­யையும் அடகு வைக்கத் தவ­றி­யதன் கார­ண­மா­கவே இன்று தமிழ்ச் சமூகம் தோற்­றுப் ­போன சமூ­க­மாக அடை­யா ளப்படுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. தமிழ் மக்கள் தமது உரி­மைக்­காகப் போரா­டு­கின்ற போது பெரும்­பான்மை இனத்­தையும் அர­வ­ணைத்துப் போராடி இருந்தால் தோற்­றுப்­போ­யி­ருக்­க­மாட்­டார்கள் என்ற புதிய கண்­டு­பி­டிப்­பொன்று சிபார்சு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. 

1947 ஆம் ஆண்டு அல்­லது அதற்கு முதல் வட­கி­ழக்கு தமிழர்கள் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட காலத்திலிருந்து மாவட்ட சபை அமைப்பு வரை இன்னும் சொல்லப் போனால் வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டது வரை ஜனநாயகப் பாரம்பரியங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இன்னுமொரு வகையில் ஜனநாயக மரபு முறைகளை சொல்லிக்கொடுத்த வர்களாக இருந்தும் கூட ஏமாற்றப்பட்டவர்களாகவே இருந்து விட்டார்கள். இணைந்தும் அனுசரித்தும் போக வேண்டு மென்றததத்துவம் ஒரு உன்னத மான உயர்ந்த தத்துவமென்பது மறுப்பதற்கில்லை. 

புத்தளம் ஜும்மா பள்ளி வாசலுக்குள் நுழைந்து (02.10.1976) மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனம் தம்புள்ளை பள்ளிவாசல் பாணந்துறை வியாபார நிலையம் குருநாகல் பள்ளிவாசல் தாக்குதல்கள் கண்டி காலி மாத்தறை பள்ளிவாசல் கெடுபிடிகள் பர்தா முஸ்லிம் பெண்கள் அணியக்கூடாது ஹிஜாப் அணிந்து வரக்கூடாது ஹலால் உணவு இலங்கைக்கு வேண்டற்பாலது. 

முஸ்லிம் மக்களுக்கெதிரான கேகாலை மாவட்ட ஒன்று கூடல் (25.02.2013) முஸ்லிம் மக்களுக்கெதிராக ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற சுவரொட்டிகள், காணிப்பறிப்புக்கள், விகாரை அமைப்புக்கள், தொல் பொருள் ஆய்வுகள் என்ற இன்னோரன்ன விடயங்கள் உணர்ச்சிமயமான அரசியல் ஆக்கப்படக்கூடாது என்பதில் முஸ்லிம் மக்கள் பொறுமையையும் நிதானத்தையும் அமைதியையும் நிறையப் பேணுவதன் மூலம் எல்லா சலுகைகளையும் உரிமைக ளையும் வசதி களையும் பெற்று வாழ முடி யுமென்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் முஸ்லிம் மக்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.