Breaking News

மகிந்தவும் மன்னிப்புக் கோர வேண்டும் அடம்பிடிக்கும் இந்திய அரசு!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர
மோடி குறித்து சர்ச்சைக்குரிய படம், கட்டுரை வெளியானது குறித்து இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.defence.lk என்ற இணையதளத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அவதூறான கருத்துக்கள் வெளியாகியிருந்தது.

குறிப்பாக தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவான விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய படமும், கட்டுரையும் நீக்கப்பட்டது. 

இதனிடையே, சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது குறித்து இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியிருந்தார். 

மன்னிப்பு கோரியது கோத்தாவின் இணையத்தளம்

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய படம் வெளியானது குறித்து இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில், சர்ச்சைக்குரிய கட்டுரை, படம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும், உரிய அனுமதியின்றி சர்ச்சைக்குரிய கட்டுரை இடம் பெற்றுள்ளது.

என்றும், சர்ச்சைக்குரிய கட்டுரை இலங்கை அரசின் நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும், பிரதமர், தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவான விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய படமும், கட்டுரையும் நீக்கப்பட்டது.

இதனிடையே, சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது குறித்து இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய படம் வெளியானது குறித்து இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில், சர்ச்சைக்குரிய கட்டுரை, படம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும், உரிய அனுமதியின்றி சர்ச்சைக்குரிய கட்டுரை இடம் பெற்றுள்ளது

என்றும், சர்ச்சைக்குரிய கட்டுரை இலங்கை அரசின் நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும், பிரதமர், தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.