Breaking News

இனப்படுகொலை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்! சீ.வீ.


இனப்படுகொலை என்று குறிப்பிடும் போது அதனைத் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் குறிப்பிட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றைக் கோரும் பிரேரணையொன்றை வட மாகாண சபையில் சமர்ப்பிக்க முன்வந்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

எங்களைக் காப்பாற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்துங்கள் என்றே தமது பிரேரணையில் கோருவதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார்.
எனினும், சர்வதேச விசாரணையைக் கோரும் சிவாஜிலிங்கத்தின் பிரேரணையில் இனப்படுகொலை என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும், அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டால் மாத்திரமே அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண சபையில் இதுகுறித்து இடம்பெற்ற விவாதத்தை இங்கே காணலாம்!