Breaking News

போர்க்குற்ற விசாரணை தொடர்பான கலந்துரையாடல் மார்ச் 25ல்

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குழுவின் விசாரணை அறிக்கை, எதிர்வரும் 2015 மார்ச் 25ம் திகதியன்று கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த மார்ச் மாத அமர்வின் நிகழ்ச்சி நிரலின்படி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 28வது முறையான அமர்வு எதிர்வரும் மார்;ச் 2முதல் 27ஆம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.இதன்போது இலங்கையின் விடயம் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

2104ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி “இலங்கையின் நல்லிணக்கத்தையும்; பொறுப்புக்கூறலையும் மேம்;படுத்தல்” என்ற அடிப்படையில் சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை, ஆணையாளரை கேட்டுக்கொண்டது.இதன்படியே 28வது அமர்வில் இலங்கையின் விசாரணை தொடர்பாக அறிக்கை ஆராயப்படவுள்ளது.