Breaking News

மகிந்த இருக்கும் வரை வடக்கு மக்களுக்கு சிறந்த வாழ்வு இல்லை -ராஜித

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை வடக்கில் உள்ள மக்களுக்கு சிறந்த வாழ்வு கிடைக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


 இந்த தேசிய பிரச்சினை தொடர்பில் ராஜபக்சக்களுடன் நான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முரண்பட்டுள்ளேன்.      இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக ராஜபக்சக்களுடன் இன்று மோதுவதில் எவ்வித பயனும் இல்லை. அதனால் தான் அவர்களைத் தோற்கடிக்கும் தீர்மானத்தினை நாம் எடுத்தோம். அவர்கள் இருக்கும் வரை வடக்கிலுள்ள மக்களுக்கு சிறந்த வாழ்வு கிடைக்கப்போவதில்லை.      

இந்த நாட்டிலுள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தினை நாம் முற்றாக இல்லாதொழித்து, அனைத்து இன மக்களையும், அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைக்கச் செய்யும் நடவடிக்கையினை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் நாம் ஆரம்பிப்போம்.