Breaking News

ஸ்ரீ.மு.காங்கிரஸின் பெரும்பான்மை ஆதரவு மைத்திரிக்கு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் உயர் அரசியல்பீடக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்தக்கூட்டத்தின் போது பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். சிலர் பொதுநிலைப்பாட்டை எடுக்கலாம் என்று ஆலோசனை கூறினர்.

இதன்போது முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, இறைமை என்பன குறித்து ஆராயப்பட்டன.ஏற்கனவே அமைச்சர் பெசில் ராஜபக்ச ரவூப் ஹக்கீமும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

ஒலி வடிவம் SoundCloud Widget

எனினும் அரசியல் உயர்பீடத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு மைத்திரிபாலவின் நோக்கி உள்ளமையால் அவருக்கே ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.இந்தநிலையில் இன்று முற்பகல் காங்கிரஸின் தீர்மானத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிடவுள்ளார்