சிறிகொத்தா மீது தாக்குதல் நடத்தியவா்கள் வீரவன்ஸவின் குண்டர்களாம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது அமைச்சர் விமல் வீரவன்ஸவின் குண்டர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த குண்டர்கள் கட்சியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் பதில் தாக்குதல் நடத்தினர்.அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சுக்குரிய நிறுவனங்களில் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.








