Breaking News

இந்த ஆண்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன

மலர்ந்துள்ள 2015ம் ஆண்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எதிர்வரும் 8ம் திகதி மிகவும் தீர்மானம் மிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்கு மேலதிகமாக இரண்டு தேசிய ரீதியான தேர்தல்கள் இந்த ஆண்டில் நடத்தப்பட உள்ளது.நாடாளுமன்ற தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் இந்த ஆண்டில் நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் நிறைவின் பின்னர் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.