Breaking News

இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நம்பிக்கை

உள்ளூர் விசாரணைகளுக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளுக்கும் ஒத்துழைக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுடாஜரிக் இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்தார்.இலங்கையின் புதிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளுடன் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பதை தாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதாக டுடாஜரிக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறும். தேவையேற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பிலேயே டுடாஜிரிக் கருத்துரைத்துள்ளார். இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கும் என்றே தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.