Breaking News

பேஸ்புக் செயலிழந்ததற்கு காரணம் என்ன?

மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் முடக்கப்பட்ட சம்பவம் உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பாதிப்புக்கான காரணம் குறித்து அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 இன்று காலை சுமார் ஒரு மணி நேரமாக பேஸ்புக் செயலிழந்த நிலையில் இருந்ததால் அனைவரும் ஏனைய சமூக வலைத்தளங்களை உபயோகித்தனர். அந்த நேரத்தில் பேஸ்புக்கை செயலிழக்க வைத்தது நாங்கள்தான் என்று லிசார்ட் ஸ்குவாட் என்ற குழு தெரிவித்தது. 

 இதை மறுத்துள்ள பேஸ்புக் நிர்வாகம், பேஸ்புக் செயலிழந்ததற்கு வெளிநபர்களால் நடந்த தாக்குதல் காரணமல்ல என்றும் உள் மென்பொருள் கோளாறே காரணம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பேஸ்புக்கில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தபோது அது பேஸ்புக்கின் உள்ளமைவு முறைகளை பாதித்ததே செயலிழப்பிற்கான காரணம் என்றும் விளக்கமளித்துள்ளது