Breaking News

தேசிய பாதுகாப்பு தொடர்பில் புதிய திட்டங்கள் - ஜனாதிபதி

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக படைகளின் பிரதானியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என்று அவர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்து விடயங்களை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்த உள்நாட்டின் ஜனநாயக திட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மைத்திரிபால கூறினார்.இதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.