Breaking News

தேர்தல் சதித்திட்டம் புலனாய்வு விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற கடந்த 8-ம் திகதி இரவு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதனை தடுப்பதற்கு சூழ்ச்சித்திட்டங்கள் முன் னெடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. 


தேர்தல் நடைபெற்ற தினமன்று இரவு சட்டத்துறையைச் சேர்ந்த இரண்டு பிரதானிகள், பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் ஒரு இடத் தில் கூடி ஆராய்ந்துள்ளதாக முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை ரத்து செய்து நாடு முழுவதிலும் அவசரகாலச் சட்டத்தை அமுல் படுத்தி முன்னைய அரசாங்கத்தை, தேர்தல் தோல்வியிலிருந்து பாதுகாக்க வேண்டு மென சட்டத்துறைசார் பிரதானி ஒருவர் யோசனை முன்வைத்துள்ளார்.இந்த யோசனையை சட்டத்துறைசார் மற்றைய பிரதானியும், பொலிஸ் மா அதிபரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். எதிர்ப்பு கிளம்பியமை காரணமாக இந்த சதித் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகி யோர் இராணுவ சூழ்ச்சித் திட்டமொன்றை முன் னெடுக்க முயற்சித்தனர் என  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலனாய்வுப் பிரிவினரிடம் நேற்றுமுன்தினம் முறைப்பாடு செய்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வின் பதவியை காப்பாற்ற பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ_ம் சில பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் விரும்பியதாகத் தெரிவிக்க ப்படுகிறது. எனினும், சட்டமா அதிபரும் பொலிஸ் மா அதிபரும் இந்த திட்டத்திற்கு இணங்க வில்லை.

இந் நிலையில் தற்போது, வெளிவிவகார அமைச்சரின் முறைப்பாட்டுக்கு அமைய சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.