ஆசனம் ஒதுக்கப்படவில்லை! ஏமாற்றத்துடன் திரும்பினார் டக்ளஸ்
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை  முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா  புறக்கணித்திருந்தார். 
 வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார்.   எனினும் கரு ஜெசூரியவை அழைத்து வந்த டக்ளஸ் தேவானந்தா நூலக கேட்போர் கூடத்தில் விட்டுவிட்டு கூட்ட அறையை விட்டு வெளியேறினார். 
 தொடர்ந்தும் ஈ.பி.டி.பி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 
 எனினும் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளும்  அதிதிகளின் பெயர்கள் இருக்கைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றில் டக்ளஸ் தேவானந்தாவின்  பெயர் குறிப்பிட்டோ அல்லது ஆசனமோ ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.   எனவே கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 
 

 
 
 
 
 
 











