Breaking News

மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை - ரணில்


சாட்சிகள் தொடர்பில் சீராக விசாரணைகள் நடத்தப்பட்டதன் பின்னர், மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று நடைபெற்றிருந்த மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்காக விசேட காவற்துறை பிரவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் மோசடி ஒழிப்பு குழுவில் இது குறித்த பல முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விசாரணைகள் அனைத்து பூரணப்படுத்தப்பட்டதன் பின்னர், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.