Breaking News

மீண்டும் மகிந்த ஆட்சிக்கு வருவாரா? - ஆர்.யசி

நாளுக்கு நாள் நாட்டில் மாற்றங்களும் எதிர்­பார்ப்­புக்­களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இன்­றைய சூழலில் புதிய பல திருப்­பங்­களும் நிகழ ஆரம்­பித்து விட்­டன.



அசைக்க முடி­யாத அர­சியல் கோட்டை­யினை கட்டி அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் தன்­வ­சப்­ப­டுத்தி தனது நம்பிக்கைக்கும் வியாபா­ரத்­திற்கும் ஏற்ற சகாக்­களை அருகில் வைத்துக்கொண்டு முன்னாள் ஜனா­தி­பதி கடந்த 10 ஆண்­டு­க­ளாக ஆட்சி நடத்தினார்

யுத்தம் முடி­விற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது அபி­வி­ருத்­திகள் விசா­ல­மா­கின சர்­வ­தே­சத்­ த­ரத்­துடன் கூடிய மாநா­டுகள் களி­யாட்­டங்கள் நடந்­தே­றின. இனி ஒரு­போதும் விழாது என்று எண்­ணிய தனது மணி­முடி பத்­தா­வது ஆண்டே வீழ்த்­த­ப்­பட்­டது. என்­னதான் சாக­சங்­களைக் காட்­டி­னாலும் பார்­வை­யா­ளர்கள் ரசிக்­கா­விடில் அது தோல்­வி­யி­லேயே போய் முடியும்.

அதே நிலை­மைதான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சியல் வாழ்­விழும் இடம்­பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணியின் துருப்புச்சீட்­டுக்­களை வாங்கி அக்­கூட்­ட­ணிக்கு எதி­ராக தயா­ரிக்­கப்­பட்ட பொது எதி­ரணி இறு­தியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணி­யினை வீழ்த்­தி­யது. சிங்கள பௌத்த வாக்­கு­களை நம்பி தனித்து வெல்ல முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக்­ஷவின் கனவு ஒரு தேசிய கூட்­ட­ணி­யினால் கலைக்கப்பட்­டது. ஒன்­று­பட்ட நாட்­டிற்குள் தமிழ், சிங்­கள, முஸ்லிம் உறவு முறை ஒன்றி­ணைக்­கப்­பட்டு தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டு­விட்­டது.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையின் கீழ் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் தமிழ் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் ஒன்­றி­ணைந்து உரு­வாக்­கி­யுள்ள நூறுநாள் தேசிய அர­சாங்கம் இன்னும் சில நாட்­களில் முடி­வ­டை­யப்­போ­கி­றது. இப்­போது அனை­வரும் கேட்கும் கேள்வி என்­ன­வெனில் நூறு நாட்­களின் பின்னர் யார் அர­சாங்கம், யார் எதிர்க்­கட்சி என்­ப­துதான். நூறு நாட்கள் வரைதான் கூட்டு அர­சாங்கம் என்ற போர்­வையில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கவும் நாட்டை ஆட்சி செய்­கின்­றனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரத்­திர முன்னணியா? ஐக்­கிய தேசிய கட்­சியா அடுத்து தனித்து ஆட்சி நடத்­து­வது? எந்த அர­சாங்கம் யாரின் தலை­மையின் கீழ் ஆட்சி செய்­யப்­போ­கின்­றது என்­பது வாக்­க­ளித்து மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­திய மக்கள் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பா­கவே அமைந்­து­விட்­டது. இந்­நி­லையில் அடுத்த பிர­த­ம­ருக்­கான சமர் ஆரம்­பித்து விட்­டது. யார் பிர­த­ம­ராகப் போகின்­றார். ஆட்சி மாற்­றத்­திற்கு உத­விய நன்­றிக்­க­டனை தீர்க்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நிய­மித்­தாலும் தொடர்ந்தும் இந்­நிலை ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

இனி­வரும் காலங்­களில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்றே தமது பிர­தமர் பத­வி­யினை தக்க வைத்­து­கொள்ள வேண்டும். அவ்­வா­றா­ன­தொரு நிலையில் அடுத்த பொதுத்­தேர்­த­லுக்­கான காலம் நெருங்­கி­விட்ட நிலையில் இப்­போது பொது­த்தேர்­தலில் கள­மி­றங்கும் எண்ணம் முக்­கிய சில உறுப்­பி­னர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க போட்­டி­யிட போகின்றார். ஆனால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பொது வேட்­பாளர் யார்? அதற்கு விடை தேடும் பய­ணத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் விசு­வா­சிகள் அதன் பங்­க­ளா­ளிக்­கட்­சிகள் களத்தில் இறங்­கி­யுள்­ளனர்.

முன்னாள் அமைச்­சர்­க­ளான வாசு தேவ நாண­யக்­கார, தினேஷ் குண­வர்த்­தன, மேல்­மா­காண அமைச்­ச­ரா­க­வி­ருந்த உதய கம்­பன்­வில மற்றும் விமல் வீர­வன்ச ஆகி­யோரின் புதிய கூட்­ட­ணியே இவ்­விடை தேடும் பய­ணத்­தினை ஆரம்­பித்­துள்­ளது. அதா­வது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை மீண்டும் ஆட்­சிக்கு கொண்­டு­வர வேண்டும். மஹிந்த சிந்­த­னையின் கீழ் நாடு ஆளப்­ப­ட வேண்டும் என தொடர்­ச்சி­யாக குரல்எழுப்­பு­கின்­றனர். அவர்­களின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பு­க­ளிலும் மக்கள் கூட்­டங்­க­ளிலும் இக்­க­ருத்­தினை முன்வைக்­கின்­றனர்.

ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களை ஒன்று திரட்டி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­விற்கு ஆத­ர­வாக குறள் எழுப்பி அழைப்பு விடுக்­கின்­றனர். ஆனால், இக்­க­ருத்­து­களை முன்னாள் ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொள்­­வாரா? அல்­லது அவரின் தூண்­டு­தலின் பின்­ன­ணி­யிலா இவ்­வாறு நடக்­கின்­றது என்­பது புரி­யாத புதி­ராக இருக்­கின்­றது. ஆனால், இவை நீண்ட நாட்கள் தொடரப்போவதில்லை. ஏனெனில் விடை கிடைக்க இன்னும் சொற்ப நாட்களே உள்ளன.

அடுத்த பொதுத்தேர்தலில் நடக்கப்போவது என்ன? யார் பிரதமர் வேட்பாளர்? மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவாறா அல்லது ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடருமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்ற நிலையில் முக்கிய அரசியல் வாதிகள் தத்தமது சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு அரசியல் தலைமைகளிடம் வினவியபோது...

விமல் வீரவம்ச

இன­வா­தமும், பிரி­வி­னை­வா­தமும் மேலோங்கி சர்­வ­தேச மற்றும் வடக்கின் பிரி­வினை வாதி­களின் தேவை­க­ளுக்கு அமை­யவே தேசிய அர­சாங்கம் உரு­வா­கி­யுள்­ளது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆரம்­பத்தில் இருந்தே வடக்கின் தனி உரி­மைகள் வேண்­டு­மென கோரி நின்­றது. அவர்­களின் கோரிக்­கைகள் அனைத்­திற்கும் உடன்­பட்டே வடக்கின் வாக்­கு­களை தேசிய அர­சாங்கம் பெற்­றுக்­கொண்­டது. வடக்கு கிழக்கு மக்­களின் வாக்­குகள் முழு­மை­யாக பொது எதி­ர­ணி­யி­னரை சென்­ற­டை­யா­தி­ருந்தால் இன்று மஹிந்த ராஜ­பக் ஷவே ஜனா­தி­ப­தி­யாக ஆட்சி செய்­தி­ருப்பார்.

சிங்­கள மக்கள் இன்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை நேசிக்­கின்­றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தேர்தல் முடி­வு­களை தவிர ஏனைய சகல மாகா­ணங்­க­ளிலும் வாக்­கு­களை அவ­தா­னித்­தி­ருந்தால் இது தெளி­வாக தெரியும். இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேவைக்கு அமைய ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் முன்னணி சிறை பிடிக்கப் பட்­டு­விட்­டது. சர்­வ­தேச சக்­தி­களின் பின்­ன­ணியில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சூழ்ச்சி வலையில் சுதந்­திரக் கட்­சி­யினர் சிக்கி விட்­டனர். அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது சூழ்ச்­சிகளை காய் நகர்த்­தல்­களை செய்து வரு­கின்­றது.

தேசிய அரசு அமைந்த பின்னர் வடக்கில் கூட்­ட­மைப்­பிற்கு ஏற்ற மாற்­றங்கள் இடம் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. எனவே, இப்­போது பொது மக்­க­ளுக்கு நன்­றாகத் தெரி­கின்­றது தேசிய அர­சாங்கம் யாருக்­காக செயல்­ப­டு­கின்­றது என்­பது. எனவே இன்று பௌத்த சிங்­கள நாடு அழிக்­கப்­பட்டு பிரி­வி­னை­வாத போராட்ட நாடு உறு­தி­யாகி வரு­கின்­றது. இதை மீட்­டெ­டுத்து தேசத்­தினை வென்­றெ­டுக்­க­வேண்­டு­மாயின் மீண்டும் தனித்­து­வ­மான தலைவர் வர­வேண்டும். கடந்த பத்து ஆண்­டு­களில் இலங்­கையில் சாத­க­மான பல விட­யங்கள் இடம்­பெற்று யுத்­தத்­திற்கு பின்­ன­ரான ஐந்து ஆண்­டு­களில் பிரி­வி­னை­வாதம் தலை­தூக்க நாம் இட­ம­ளிக்­க­வில்லை.

ஆனால், எம்மை சர்­வா­தி­கா­ரி­க­ளாக சித்­த­ரித்து ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தி விட்­டனர். இவர்­களை நம்பி வாக்கு கொடுத்த மக்­களின் நிலைமை இன்று கேள்­விக்­கு­றி­யாகி விட்­டது. எனவே இழந்­த­வற்றை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். பழைய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியினை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப வேண் டும். ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் தலை­வ­ராக மஹிந்த ராஜ­பக் ஷ வர­வேண்டும். அதற்கான அழைப்பினை நாம் எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு விடுக்கின்றோம். மக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்பதுவே. அவர் அரசியலில் மீண்டும் காலடி எடுத்து வைக்க வேண்டும்.

  சம்­பிக்க ரண­வக்க

நாட்­டிற்கும் மக்­க­ளுக்கும் எது தேவை மக்கள் எதை விரும்­பு­கின்­றனர் என்­பதன் அடிப்­ப­டை­யி­லேயே ஆட்சி அமையும். மக்­களின் விருப்­பங்­களை மீறி தனி ஒரு­வரால் ஆட்சி நடத்த முடி­யாது. கடந்த காலத்தில் இவ்­வா­றா­ன­தொரு நிலைமை காணப்­பட்­டது. யுத்­தத்­தினை வெற்றி கொண்­ட­தனால் மக்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆத­ரித்­தனர்.

ஆனால் யுத்த வெற்றி கதை­களை தொடர்ந்தும் கூறிக் கொண்டு மக்­களை தக்க வைத்துக் கொள்ள முடி­யாது என்­பது இம்­முறை தேர்­தலில் வெளிப்­பட்டு விட்­டது. இன­வாத அர­சியல் தேவைப்­பட்­டது உண்­மையே. ஆனால் இவ் இன­வாதம் பிர­யோ­கிக்­கப்­பட்­டது தமிழ், முஸ்லிம் அப்­பாவி மக்­க­ளுக்­காக அல்ல, பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவே. எனவே விடு­த­லைப்­பு­லி­களின் ஆதிக்­கத்­தினை கட்­டுப்­ப­டுத்­தவே அர­சாங்­கத்தில் இருந்து கொண்டு கடு­மை­யான போக்­கினை கையாண்டோம்.

ஆனால் இன்று மக்கள் ஒற்­று­மை­யினை விரும்­பு­கின்­றனர். அவர்­களின் உணர்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­ட­வேண்டும். இப்­போது அமை­யப்­பெற்­றி­ருக்கும் தேசிய அர­சாங்கம் அனைத்து மக்­களின் ஆத­ர­வுடன் உரு­வாக்­கப்­பட்­டது. எனவே இம்­முறை மக்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷவை வெறுத்­து­விட்­டனர். மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சியில் ஊழல் குற்­றங்கள் எவையும் இருக்­காது. கடந்த ஆட்­சியின் முக்­கிய பிர­மு­கர்கள் செய்த குற்­றங்கள் பல வெளிச்­சத்­திற்கு வந்து கொண்டு இருக்­கின்­றன. எனவே அவை இன்று மக்­களின் முன்னே நன்­றாகத் தெரி­வது மட்­டு­மன்றி உண்­மை­யான விடு­த­லையினை மக்கள் இன்று உணர்­கின்­றனர்.

 எனவே இந்த ஆட்­சி­யினை தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும் என மக்கள் எதிர்­பார்க்­கின்­ற­தனால் தேசிய அர­சாங்கம் வீழ்த்­தப்­ப­டாது அவ்­வாறு தேசிய அர­சாங்கம் மக்­க­ளுக்கு திருப்­தி­யின்­மை­யாயின் மக்­களின் எதிர்­பார்ப்­பினை எம்மால் பூர்த்­தி­செய்ய முடி­ய­வில்­லை­யெனின் மக்­களே மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­துவர். ஆனால் ஜன­நா­ய­கத்­தினை அனு­ப­விக்கும் மக்கள் இனி­யொரு போதும் சர்­வா­தி­கா­ரத்­தினை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. குடும்ப ஆட்­சி­யினை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை.

அதேபோல் ஊழல், வறுமையுடன் கூடிய பொரு­ளா­தார முறை­மை­யினை ஏற்றுக் கொள்ளப் போவ­தில்லை. ஆகவே இனி இலங்­கையில் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் தனது அர­சியலை மீண்டும் ஆரம்­பிக்­காது குடும்ப அர­சியல் இடம்பெறப் போவ­து­மில்லை. அடுத்த பொதுத்­தேர்­தலில் கட்­சிகள் தனித்து கள­மி­றங்­கி­னாலும் தேசிய அர­சாங்கம் தொடரும்.

  அனுரகுமார திசா­நா­யக்க

குடும்ப அர­சி­யலின் சர்­வா­தி­கார ஆட்­சியும் ஊழல், கொலை, அடக்­கு­மு­றை­களே மஹிந்த ராஜக் ஷ ஆட்­சியின் வீழ்ச்­சிக்கு வித்­திட்­டது. ஒரு தலைவர் என்ற எண்ணம் மாறி ஒரே தலைவர் என்ற எண்ணம் ஏற்­பட்­டதன் விளைவு இன்று ஆட்­சி­மாற்றம் வரை கொண்டு சென்­று­விட்­டது. நாட்டின் வளங்கள் சூறை­யா­டப்­பட்­ட­மையும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாதச் செயற்­பா­டுகள் தூண்டி விடப்­பட்­ட­மையும் கடந்த காலங்­களில் அழிக்­க­மு­டி­யாத வடுக்­க­ளாக மாறி­விட்­டன.

இலங்கை சர்­வ­தேச அழுத்­தங்­களில் சிக்­கிக்­கொள்ள ஒரே காரணம் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கமே. தமது சுய­ந­லத்­திற்­காக நாட் டில் நல்­லாட்­சி­யி­னையும் ஜன­நா­ய­கத்­தி­னையும் கேள்­விக்­கு­றி­யாக்­கி­விட்­டனர். அதில் இருந்து விடு­பட நடத்­தப்­பட்ட போராட்டம் மிகவும் பயங்­க­ர­மா­ன­தாக இருந்­தது. உயிரை பணயம் வைத்து ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். எனவே மக்கள் இனி­யொ­ரு­போதும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சி­யினை விரும்­பப்­போ­வ­தில்லை. அதேபோல் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் தேசிய அர­சாங்­கத்தின் ஆட்சி மக்­களை திருப்­திப்­ப­டுத்தும்.  ஆட்­சியா அல்­லது ஜன­நா­யகம் சட்டம் நீதி செயற்­படும் ஆட்­சியா என்­பதை எம்மால் தெரி­விக்க முடி­யாது. நாம் கடந்த அரசின் ஊழல்­க­ளையும் குற்­ற­ச்சாட்­டுக்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

பயங்­க­ர­வா­தி­களை இனங்­காட்டி அவர்கள் தொடர்­பான குற்­றச்­சாட்டு ஆதா­ரங்­க­ளையும் முன்­வைத்­துள்ளோம். ஆனால் ஆதா­ரங்கள் பல இருந்தும் இந்த அர­சாங்கம் இவர்கள் தொடர்பில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் இன்னும் முன்­னெ­டுக்­க­வில்லை. கடந்த அர­சாங்­கத்­தினை மக்கள் மாற்றி புதிய ஆட்­சி­யினை அமைத்­தது நல்­லாட்­சிக்­கா­கவே தவிர தனிப்­பட்ட ஒரு சிலரை மாற்­ற­வேண்டும் என்­ப­தற்­காக அல்ல. ஆனால் தேசிய அர­சாங்­கத்தின் நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்தில் இவர்கள் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்­தையும் செய்து கொடுப்­பார்­களா என்­பதில் சந்­தேகம் எழு­கின்­றது.

அதேபோல் குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­பதில் அர­சாங்கம் மெது­வான போக்­கினை கையாள்­வது ஏன்? குற்­ற­வா­ளி­களின் பின்­ன­ணியில் இந்த அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றதா? என பல கேள்­விகள் எழு­கின்­றன. எனவே இந்த அர­சாங்கம் நல்­லாட்சி என்­பதை வெறும் வார்த்­தை­களில் மட்டும் வைத்­துக்­கொள்­ளாது நடை­மு­றையில் வெளிப்­ப­டுத்த வேண்டும். அதேபோல் பொதுத் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ கள­மி­றங்­கப்­போ­வ­தில்லை. கள­மி­றங்­கி­னாலும் வெற்­றி­கொள்ள வாய்ப்­புக்கள் இல்லை. அதேபோல் ஐக்­கிய தேசிய கட்சி ஆட்­சி­ய­மைக்­கவும் கடு­மை­யாக பாடுப்­பட வேண்டும்.

-ஆர்.யசி-