Breaking News

எதிர்க்கட்சி தலைவராகிறார் சம்பந்தன்!

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் இணைந்­து ­கொண்­டுள்ள நிலையில் தற்­போது நிமல் சிறி­பால டி.சில்­வா­வினால் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வகிக்க முடி­யுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைந்­துள்ள நிலையில் சுதந்­திரக் கட்சி ஆளும்கட்­சி­யாக மாறி­விட்­டது. இதனால் தற்­போது எதிர்க்­கட்சித் தலை­வ­ராக பதவி வகிக்கும் நிமால் சிறி­பால டி. சில்வா ஆளும் கட்­சியில் இருந்­து­கொண்டு எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வகிக்க முடி­யுமா என்ற கேள்­வி எழுந்துள்ளது.

இந்­நி­லையில் அவ்­வாறு நிமால் சிறி­பால டி. சில்வா எதிர்க்­கட்சி தலைவர் பத­வியை இழந்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறும் வாய்ப்புள்ளது. தற்­போ­தைய நிலை­மையில் மூன்­றா­வது பெரிய கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு காணப்­ப­டு­கின்றது.

ஒருவேளை அப்படி நிகழ்ந்தால் அமிர்தலிங்கத்தின் பின்னர் எதிர்க்கட்சி தலைவரான தமிழர் என்ற சிறப்பை சம்பந்தனும் பெறுவார்.