எதிர்க்கட்சி தலைவராகிறார் சம்பந்தன்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள நிலையில் தற்போது நிமல் சிறிபால டி.சில்வாவினால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி ஆளும்கட்சியாக மாறிவிட்டது. இதனால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கும் நிமால் சிறிபால டி. சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் அவ்வாறு நிமால் சிறிபால டி. சில்வா எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலைமையில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது.
ஒருவேளை அப்படி நிகழ்ந்தால் அமிர்தலிங்கத்தின் பின்னர் எதிர்க்கட்சி தலைவரான தமிழர் என்ற சிறப்பை சம்பந்தனும் பெறுவார்.








